..குருதிக்கூடு..

..என்னவளுக்காக..

Wednesday 24 August 2011

ஏனோ கிறுக்குகிறேன்...

                                              என் காதல்

என் பெயர் சபரி. நான் அழகான வாழ்கையின் முழு அர்தத்தையும் தேடி திரிந்து கொண்டிருந்தேன்.
மழையில் நனைந்து வீடு வந்தால் மழையை திட்டும் என் தாயின் பாசத்தில்.. தேனீக்கள் கூட்டம் போல நண்பர்களுடன் சுற்றித்திரிந்த நாட்களில்.. சிநேகிதனின் மரணத்தில்.. பசியின் ஏக்கத்தில்.. வாழ்க்கையின்
பாதி அர்த்தம் அறிந்தேன். காதல் பள்ளிகொள்ள ஆசை.. ஏனோ அது மட்டும் தாமதமாக....
தோழி ஒருத்தி மூலம் தொலைபேசியிள் அவள் அறிமுகம் கிடைத்தது (09-02-2011). அன்று என் பேச்சில்
விட்ட இரு கணைகள் எங்கேயோ போய் விழுந்து விட்டதென்று எண்ணினேன்..  ஆனால் இதோ (16-02-2011
அன்று அவளை சந்திதேன்) அவளது புருவத்தின் கீழே போய் நின்று கொண்டு என்னையே திருப்பித் தாக்குகிறது.  காந்தவிழி கொண்டு அவள் பார்க்கையில் மனதிலே பெரிய போர் நடைபெறுகிறது ஆம் ஆனால் அது சேரன் செங்குட்டுவனின் வடதிசை போர் போல சீக்கிரம் முடிந்தது. அதிலே என் ஆண்மை தோற்றது- அவள் பெண்மை வென்றது. அவள் வீசிய "வெறும் பார்வை-அதிலே என் உள்ளம் கொள்ளை"-இதிலேயே
காதலில் எவ்வளவு பகுதி பூர்த்தியாகிறது என்பதை உணர்ந்தேன். ஆஹா வாழ்கையின் முழு அர்த்தமும் புரிகிறது..! வாய் திறக்க முயல்கிறேன் முடியவில்லை-பசைபோட்டு ஒட்டியது போலாகிறது. போகட்டும்
கண் பேச்சிலே காதல் வளர்ப்போமே..!
    அவள் வீசிய புன்னகையும்-உலக இன்பத்தின் சாரத்தை இரு சிறு பிரிவுகளாக்கிச் செவ்வர்ண்ம் பூசியதுபோல்
தன் இதழ்கொண்டு அவள் சிந்திய வெட்கச் சிரிப்பும் இருதலை நாகமாக தாக்குகிறது. நேரம் செல்ல செல்ல புன்னகை நிலவு என்னை ஆண்டு கொள்கிறது.. இருவராக இருக்கும் பொழுது எவ்வளவு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டோம். ஆம் அவள் பெயர் கீர்த்திகா. பெயரின் முதல் எழுத்து மட்டும் கீ அல்ல, என் இதயத்தின் கீ-யும் அவளிடம் தான்..

காதலின் பாரம் அதிகமாக என் காதலை சொல்லத் துடிக்கும் தருணம்.. இதோ
புதையலாக.. புதுமலராக.. அவள் பூத்த நாளில் (பிறந்த நாள்) முதல் முத்தம் பதித்து என் காதலை சொன்னேன்.
அன்று இரவு, அவள் பக்கத்திலே வருவது போலவும்.. நெற்றியைத் தொட்டு முத்தமிடுவது போலவும்.. அவளது செம்பவள இதழ் கொண்டு தன்னை முத்தமிட்டு  முத்தமிட்டு  தன்னை கரைத்து விடுவது போலவும் எண்ணி எண்ணிப் புரண்டு படுக்களானேன்.
இரவு தூங்கவைக்கும் அவள் நியாபகமே காலை எழுப்பிவிடுகிறதே..!
    இன்றுவரை அவளை காணாத பகல் - வேளையில்லாதவனின் பகல் போலவும்... இரவு - ஒரு நோயாளியின் இரவைப் போலவும் இருக்கிறது...

..ரணம்..

                    
                                                        ..காதல் தோல்வி..

இந்த நாட்டில் பலருக்கு காதலிக்கத் தெரிகிறது ஆனால் சிலருக்குத் தான் நிறைவேற்றிக் கொள்ளத் தெரிகிறது.
இங்கே எத்தனையோ காதல்கள் விதைக்கப்பட்ட மறுநாளே புதைக்கப்படிகிறது. பல காதல் பூக்கள் கல்லரையில் விழவே பூக்கின்றன. சில காதல் கனிகள் கனிகின்ற அவசரத்தில் விம்பிவிடுகின்றன. அதற்கு
காதலர்கள் மட்டும் காரணமல்ல.. மண், வெப்பம், காற்று, ஈரம் இந்த நான்கு காரணங்களில் ஒரு காரணம்
குறைந்தாலும் விதை முளைக்காது என்பது மாதிரி.. ஜாதி, மதம், மரபு, பொருளாதரம் இந்த நான்கில் ஒன்று குறைந்தாலும் கூட காதல் கற்பத்திலேயே கறைந்து விடுகிறது. இந்த கடிதம் எழுதுபவன் காதலை ஏற்றுக்கொண்டவன் இறுதியில் காதலியை ஏற்றுக்கொள்ள முடியாதவன்.
     பருவம் காதல் எனும் சிறகு குடுத்தது ஆனால் எதார்த்தம் என் சிறகுகளை கத்திருக்கிறது..
கால்களில் லாடங்களோடு உன்னோடு ஓடிவர முடியாது காதலி என்று கண்ணீர் வாசகம் பேசுகிறான்.
இப்படித்தான் இந்தியாவில் பல காதலர்களுக்கு...
        " உன்னை காதலிக்கிறேன் என்பது தமிழ்த்தாய்வாழ்த்தாகவும்..
          என்னை மறந்துவிடு என்பது தேசியகீதமாகவும் ஒளிக்கிறது.."
இதோ அவனது மனதின் குறியீடு (ஏன் நம்மில் பலரது மனக் குறியீடும் இதுதான்) :
சொன்னவன் நான் தான் - உனக்கும் சேர்த்து சுவாசிக்கிறேன் என்று சொன்னவன் நான் தான்..
சொன்னவன் நான் தான் - உன்னைத் தவிர என் கண்களுக்கு வேறு எதையும் பார்க்கத் தெரியவில்லை என்று சொன்னவன் நான் தான்..
 நம் திருமணத்தில்
கடல் முத்துக்களையும்..
வானம் நட்சத்திரத்தையும் அர்ச்சனை தூவும்
என்று சொன்னவன் நான் தான்..
    ஒருவேளை நாம் பிரிந்தால்...!
மழை மேல் நோக்கிப் பெய்யும்..
காற்றும் இடைமறிக்கும்.. என்று சொன்னவன் நான் தான்..
இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால் இதை சொல்வதும் நான் தான்..
                                       " என்னை மன்னித்து விடு
                                          என்னை மன்னித்து விடு"
நான் காதல் கொண்டது நிஜம்.. கனவு வளர்த்தது நிஜம்.. எனது இரத்தத்தில் இரண்டு அனுக்கள் சந்தித்து கொண்டு உனது பெயரை உச்சரித்தது நிஜம்.. காதலியைத் தெரிந்த எனக்கு காதலிக்கத் தெரியவில்லை..

(இந்தியா காதல் பூமிதான்.. காதலர் பூமியல்ல) காதலுக்கு சிறகு மட்டுமெ தெரியும் ஆனால் திருமணத்திற்குத் தான் கால்களும் தெரியும்.. எனக்கு சிறகு தந்த காதலியே என் கால்களின் லாடத்தை யார் அறிவார்? சொல்கிறேன்..
" என் தாயைவிட சாய்ந்த நாற்காலியை அதிகம் நேசிக்கும் என் தந்தை "
" சீதணம் கொண்டுவந்த பழைய பாய் போல் கிழிந்த என் தாய் "
" தான் பூப்பெய்த செய்திகூட புரியாத என் தங்கை "
" கிளிந்த பாயில் படுத்துக் கொண்டு கிளியோபாட்ராவை நினைத்து ஏங்கும் என் அண்ணன் "
" கறுப்பு-வெள்ளை தொலைகாட்சியில் கலர் கனவு காணும் என் தம்பி "
இத்தனை பேருக்கும் மாதா மாதம் பிராணவாயு வழங்கும் நான் கால்களில் லாடங்களோடு எப்படி உன்னுடன்
ஓடி வருவேன்.. என்னை மன்னித்து விடு.. என்னை மன்னித்து விடு.. 
ஐரோப்பாவில் கல்யாணத் தோல்விகள் அதிகம்.. இந்தியாவில் காதல் தோல்விகள் அதிகம்.. இந்தியா காதலின் பூமிதான்.. காதலர் பூமியல்ல...

My

pitichiruku