..குருதிக்கூடு..

..என்னவளுக்காக..

Saturday 12 November 2011

 நான் உன்னை காதலிக்கிறேன் என்பது 100      
                        மொழிகளில் இதோ.....

தமிழ் - நான் உன்னை காதலிக்கிறேன்...

English - I love you

Afrikaans - Ek het jou lief

Albanian - Te dua

Arabic - Ana behibak (to male)

Arabic - Ana behibek (to female)

Armenian - Yes kez sirumem

Bambara - M'bi fe

Bengali - Ami tomake bhalobashi (pronounced: Amee toe-ma-kee bhalo-bashee)

Belarusian - Ya tabe kahayu

Bisaya - Nahigugma ako kanimo

Bulgarian - Obicham te

Cambodian - Soro lahn nhee ah

Cantonese Chinese - Ngo oiy ney a

Catalan - T'estimo

Cherokee - Tsi ge yu i

Cheyenne - Ne mohotatse

Chichewa - Ndimakukonda

Corsican - Ti tengu caru (to male)

Creol - Mi aime jou

Croatian - Volim te

Czech - Miluji te

Danish - Jeg Elsker Dig

Dutch - Ik hou van jou

Elvish - Amin mela lle (from The Lord of The Rings, by J.R.R. Tolkien)

Esperanto - Mi amas vin

Estonian - Ma armastan sind

Ethiopian - Afgreki'

Faroese - Eg elski teg

Farsi - Doset daram

Filipino - Mahal kita

Finnish - Mina rakastan sinua

French - Je t'aime, Je t'adore

Frisian - Ik h�ld fan dy

Gaelic - Ta gra agam ort

Georgian - Mikvarhar

German - Ich liebe dich

Greek - S'agapo

Gujarati - Hoo thunay prem karoo choo

Hiligaynon - Palangga ko ikaw

Hawaiian - Aloha Au Ia`oe

Hebrew

Hebrew to male: "ani ohev otcha" (said by male) "Ohevet ot'cha" (said by female)

Hebrew to female: "ani ohev otach" (said by male) "ohevet Otach" (said by female)

Hiligaynon - Guina higugma ko ikaw

Hindi - Hum Tumhe Pyar Karte hae

Hmong - Kuv hlub koj

Hopi - Nu' umi unangwa'ta

Hungarian - Szeretlek

Icelandic - Eg elska tig

Ilonggo - Palangga ko ikaw

Indonesian - Saya cinta padamu

Inuit - Negligevapse

Irish - Taim i' ngra leat

Italian - Ti amo

Japanese - Aishiteru or anata ga daisuki desu

Kannada - Naanu ninna preetisuttene

Kapampangan - Kaluguran daka

Kiswahili - Nakupenda

Konkani - Tu magel moga cho

Korean - Sarang Heyo or Nanun tangshinul sarang hamnida

Latin - Te amo

Latvian - Es tevi miilu

Lebanese - Bahibak

Lithuanian - Tave myliu

Luxembourgeois - Ech hun dech g�er

Macedonian - Te Sakam

Malay - Saya cintakan mu / Aku cinta padamu

Malayalam - Njan Ninne Premikunnu

Maltese - Inhobbok

Mandarin Chinese - Wo ai ni

Marathi - Me tula prem karto

Mohawk - Kanbhik

Moroccan - Ana moajaba bik

Nahuatl - Ni mits neki

Navaho - Ayor anosh'ni

Norwegian - Jeg Elsker Deg

Pandacan - Syota na kita!!

Pangasinan - Inaru Taka

Papiamento - Mi ta stimabo

Persian - Doo-set daaram

Pig Latin - Iay ovlay ouyay

Polish - Kocham Ciebie

Portuguese - Eu te amo

Romanian - Te iubesc Awexu

Russian - Ya tebya liubliu

Scot Gaelic - Tha gra\dh agam ort

Serbian - Volim te

Setswana - Ke a go rata

Sign Language - ,\,,/ (represents position of fingers when signing'I Love You')

Sindhi - Maa tokhe pyar kendo ahyan

Sioux - Techihhila

Slovak - Lu`bim ta

Slovenian - Ljubim te

Spanish - Te quiero / Te amo

Swahili - Ninapenda wewe

Swedish - Jag alskar dig

Swiss-German - Ich lieb Di

Surinam - Mi lobi joe

Tagalog - Mahal kita

Taiwanese - Wa ga ei li

Tahitian - Ua Here Vau Ia Oe

Tamil - Nan unnai kathalikuraen

Telugu - Nenu ninnu premistunnanu

Thai - Chan rak khun (to male)

Thai - Phom rak khun (to female)

Thai (informal) Rak te

Turkish - Seni Seviyorum

Ukrainian - Ya tebe kahayu

Urdu - MUJHE TUM SE MUHABAT HAIN / MUJHE TUMSE ISHK HAI....

Vietnamese - Anh ye^u em (to female)

Vietnamese - Em ye^u anh (to male)

Welsh - 'Rwy'n dy garu di

Yiddish - Ikh hob dikh

Yoruba - Mo ni fe

 நீங்க எந்த மொழில உங்க காதல சொல்லப் போறிங்க.....?





(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

 

Monday 12 September 2011

..பருவம் எய்தாத தாய்..

                             ..பருவம் எய்தாத  தாய்..
      சிறுவாணி மலையின் குளிர்ச்சியை சுமந்துவந்து நரம்புகளிடம் நலம் விசாரிக்க தன்னை தாவியணைத்த தென்றல் காற்றுடன்-இயற்க்கையுடன் செய்த ஒப்பந்தம் முடிந்த சோகத்தில் மரக்கிளையிலிருந்து உதிர்ந்த
மலர்களுக்கிடையே வீட்டின் முற்றம் வந்தாள் நிலா-பெயருக்கு ஏற்றது போல் அவள் முகம் நிலாமுகம். அமாவாசை ஆனால் இவள் வீதியில் மட்டும் வெளிச்சம்-காரணம் இந்நிலா.
      அப்பகுதி இளவட்டங்கள், நான் நிலாவை நேற்று பார்த்தேன்.. நான் இன்று பார்த்தேன் என்று பெருமை பீய்த்து கொள்வார்கள். அவள் இட்ட (பார்வையெனும்) மருந்தால், இருமல் பிடித்த குட்டியிட்ட நாய் போல் குலைவார்கள். ஒரு சிலரோ கனவு கண்டு மகிழ்வதோடு சரி.
      
       வாசல் வந்து கோலம் போட ஏதுவாக அமர்ந்து புள்ளிவைக்க எத்தனிக்கையில் மொபட்டில் வந்தான் கர்வம்மிக்க சூரி என்கிற சூரியன்-வாரணம் ஆயிரம் கொண்டவன். (அவனை பார்க்கவே கோலம் போட வந்தாள்). அவள் உடல் எங்கு நோக்கினும் சூரியன்-சொல்லப்போனால் அவள் நெஞ்சமே சூரியன் உருவம் போல் ஆகிவிட்டது. காமம் வளரா காதல் வளர்த்தார்கள்.. திருமணம் செய்ய எண்ணினார்கள்..சூரியினின் தாய் நிலாவை வரவேற்றாள்.. ஆமாம் முற்றத்தில் வீசும் நிலா வீடெனும் கூட்டில் வீசினால் வேண்டாம் என்பார்களா? நிலாவைப் பெற்றவளோ காதல் படலத்தை கடந்து விட்ட மூதாட்டி. கொக்கைப் போல் நரைத்த கூந்தல்.. தன்க்குத் தான் கையில் இருக்கும் கோல் என்று தெரியாமல் தானாட-கோலாட தடுமாறும் முதிவள். தன் காலம் கடந்து விட்ட காரணமோ என்னவோ மகளை காதலிக்க விடாமல் தடுக்கும் பெருமாட்டி. மகள் நிலாவைப் பார்த்து நீ சூரியனை நீ கண்ணாலும் காணக்கூடாது என்று கட்டளையிடுகிறாள் அந்தக் கிழவி. ஆத்திரம் கொள்கிறாள் நிலா.. அவளது ஆத்திரம் வசையாகாமல் சந்தேகமாக மாற்றம் கொள்கிறது..
        மாலைப்பொழுதில் தன் தோழியை அழைக்கிறாள். அடி தோழியே, சூரியின் மீது நான் காதல் கொள்ளக்கூடாது என்று தன் தாய் தடுக்கிறாளே ஏன்? என்று கேட்கிறாள்-அவளோ விழி பிதுங்கி நிற்கிறாள்.. ஆமாம் அவள் மட்டுமென்ன காதல் கடலிலே நீச்சலடித்து காதலைப் பற்றிய தத்துவங்களை பிழிந்து எடுத்துக்கொண்டு வந்தவளா? பாவம் புதுசு..! காதல் கடலின் முதற்படியைக் கூட மிதிக்காதவள். ஏதோ தனக்கும் ஒரு நாள் காதல் வரும் என்கிற அளவில் மட்டுமே காதலைப்பற்றித் தெரிந்தவள். சேற்றில் எறிந்த   பந்துபோல நிலாவின் கேள்வி இவளிடம் கேள்வியாகவே தங்கிடவும்  நிலாவிற்கு கோபம் வருகிறது. ஒருவேளை இப்படி  இருக்கலாமோ என்று நிலா கூற-தோழி கூர்ந்து கவனிக்கிறாள்.
      அடி தோழியே..! என் தாய் குழந்தையாயிருந்து பருவப்பெண் ஆகாமல், ஒரே பாய்ச்சலில் கிழவியாகியிருப்பாளோ? இளமைப் பருவத்தின் துடிப்புகளை உணராத முதியவளாகவே அவளது வாழ்க்கை தொடங்கியிருக்குமோ? இல்லையென்றால் என் காதலைத் தடுப்பதற்க்கு நியாயம் இல்லையே தோழி..! ஒன்று மட்டும் விளங்குகிறது, என் அன்னை இளையவளாய் மூத்தவள் அல்ல.. முதியவளாகவே பிறந்தவள்-என்கிற முடிவிற்கு வருகிறாள்...

Friday 2 September 2011

..பூலோக தேவதை..



      அருமையான பூங்கா.. ஒரு இளைஞன் வருகிறான்-அங்கே மெல்லிய   இடை கொண்ட பூங்கொடி ஒருத்தி நிற்கிறாள். பயலுக்கு உடம்பு துடிக்கிறது. உள்ளம் தந்தியடிகிறது... யார் இவள்? தேவலோகத்து ஊர்வசியா?    தனம் பற்றி தவிக்க வைக்கும்  ரம்பையோ?   பூமியிலே  இதுபோன்று  ஒரு அழகியா? என்று அதிசயிக்கிறான். சரி அவள் பூலோகமா? தேவலோகமா என்று ஒரு முடிவெடுக்க வேண்டுமல்லவா? ஆதலால் அவள் பாதம் பார்க்கிறான்.. பூமி அவள் பாதத்திற்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆகா..! இவள் பூலோக பிரஜை தான்.. ஏனென்றால் தன் வீட்டுக் கிழவி சொன்ன கதைகளில் தேவலோகக் குமரிகள் வானில் மிதப்பார்கள் - பறப்பார்கள் என்று தான்.. 

இவளின் பாதமோ பூமியில்.. ஆகவே இவள் மானிடப்பிறவி தான் என்ற முடிவிற்கு வருகிறான்.
     அவள் அருகே செல்கிறான்-அவள் அழகில் கண் சிமிட்ட மறக்கிறான்-அன்பே என்கிறான்-சற்றே தடுமாற்றத்தோடு நான் உன்னை காதலிக்கிறேன் என்கிறான்-மெளனம் காக்கிறாள்-நீ சம்மதம் மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன் என்கிறான்-அவளோ நாள் பட்ட நோய் போல் பதில் கூறாமல் போகிறாள்.. அன்று மாலையில் காதல் ஏக்கத்தோடு அலுத்துத் தூங்குகிறான். காதல் விடுமா? கனவிலும் வருகிறாள் அந்த காரிகை.. காதலும் தருகிறாள்.. இனியும் தம்மால் பொருக்க முடியாதென்று எழுந்து அமர்கிறான். பூங்காவில் சந்தித்த அந்த மோகனக்குமாரியின் அழகை எண்ணி எண்ணி புலம்ப ஆரம்பிக்கிறான். இரவில் அவன் புலம்பியதை அம்பாக திரித்து காலையில் அவள் விழியில் செலுத்த எண்ணி படுக்கலானான்.
     மறுநாள் காலை அவளைப் பார்க்கிறான். சாதாரணக் காதலர்கள் பார்க்கும் பொழுது என்ன நடக்கும்? உணர்ச்சிகள் மீதூறும்-உடல் சூடேறும் இதுதானே நடக்கும். ஆனால் இவனுக்கோ மெய்தளர்ந்து விட்டது.
   ஏ பெண்ணே.. நீ எப்படி இருக்கிறாய் தெரியுமா?
.. கட்டாத பூமாலை ..
.. கற்பக பூ மாலையில் வாசம் தரும் வண்டு ..
.. வேந்தர்களிடம் இல்லாத செல்வம் ..
.. மேகம் சேராத மின்னல் ..
.. தெவிட்டாத தேன் ..
.. தாகம் தணிக்கும் தனி மருந்து ..
வட்டமுகக் கட்டழகுப் பெட்டகமே.. வாயேன் இப்பக்கம்.. தாயேன் ஒரு முத்தம்.. ஜோடி காதலர்கள் நாமே.. வா ஆடி மகிழ்வோம் மானே..
     பேராசை என்னும் ஆழ்கடலில் விழுந்துவிட்டேன் உனது தோள் என்னும் கப்பலில் ஏற்றிக் கரை சேர்க்க மாட்டயா? - என்று அவளை அணு அணுவாகப் பிளந்துகட்டுகிறான்- மெளனம் கலைத்தால்.. வெட்க்கத்துடன் தலைகுனிந்து ஏரிக்கொள்ளுங்கள் நாம் யாருமில்லா தனித் தீவில் குடிபுகுவோமென்று...

Wednesday 24 August 2011

ஏனோ கிறுக்குகிறேன்...

                                              என் காதல்

என் பெயர் சபரி. நான் அழகான வாழ்கையின் முழு அர்தத்தையும் தேடி திரிந்து கொண்டிருந்தேன்.
மழையில் நனைந்து வீடு வந்தால் மழையை திட்டும் என் தாயின் பாசத்தில்.. தேனீக்கள் கூட்டம் போல நண்பர்களுடன் சுற்றித்திரிந்த நாட்களில்.. சிநேகிதனின் மரணத்தில்.. பசியின் ஏக்கத்தில்.. வாழ்க்கையின்
பாதி அர்த்தம் அறிந்தேன். காதல் பள்ளிகொள்ள ஆசை.. ஏனோ அது மட்டும் தாமதமாக....
தோழி ஒருத்தி மூலம் தொலைபேசியிள் அவள் அறிமுகம் கிடைத்தது (09-02-2011). அன்று என் பேச்சில்
விட்ட இரு கணைகள் எங்கேயோ போய் விழுந்து விட்டதென்று எண்ணினேன்..  ஆனால் இதோ (16-02-2011
அன்று அவளை சந்திதேன்) அவளது புருவத்தின் கீழே போய் நின்று கொண்டு என்னையே திருப்பித் தாக்குகிறது.  காந்தவிழி கொண்டு அவள் பார்க்கையில் மனதிலே பெரிய போர் நடைபெறுகிறது ஆம் ஆனால் அது சேரன் செங்குட்டுவனின் வடதிசை போர் போல சீக்கிரம் முடிந்தது. அதிலே என் ஆண்மை தோற்றது- அவள் பெண்மை வென்றது. அவள் வீசிய "வெறும் பார்வை-அதிலே என் உள்ளம் கொள்ளை"-இதிலேயே
காதலில் எவ்வளவு பகுதி பூர்த்தியாகிறது என்பதை உணர்ந்தேன். ஆஹா வாழ்கையின் முழு அர்த்தமும் புரிகிறது..! வாய் திறக்க முயல்கிறேன் முடியவில்லை-பசைபோட்டு ஒட்டியது போலாகிறது. போகட்டும்
கண் பேச்சிலே காதல் வளர்ப்போமே..!
    அவள் வீசிய புன்னகையும்-உலக இன்பத்தின் சாரத்தை இரு சிறு பிரிவுகளாக்கிச் செவ்வர்ண்ம் பூசியதுபோல்
தன் இதழ்கொண்டு அவள் சிந்திய வெட்கச் சிரிப்பும் இருதலை நாகமாக தாக்குகிறது. நேரம் செல்ல செல்ல புன்னகை நிலவு என்னை ஆண்டு கொள்கிறது.. இருவராக இருக்கும் பொழுது எவ்வளவு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டோம். ஆம் அவள் பெயர் கீர்த்திகா. பெயரின் முதல் எழுத்து மட்டும் கீ அல்ல, என் இதயத்தின் கீ-யும் அவளிடம் தான்..

காதலின் பாரம் அதிகமாக என் காதலை சொல்லத் துடிக்கும் தருணம்.. இதோ
புதையலாக.. புதுமலராக.. அவள் பூத்த நாளில் (பிறந்த நாள்) முதல் முத்தம் பதித்து என் காதலை சொன்னேன்.
அன்று இரவு, அவள் பக்கத்திலே வருவது போலவும்.. நெற்றியைத் தொட்டு முத்தமிடுவது போலவும்.. அவளது செம்பவள இதழ் கொண்டு தன்னை முத்தமிட்டு  முத்தமிட்டு  தன்னை கரைத்து விடுவது போலவும் எண்ணி எண்ணிப் புரண்டு படுக்களானேன்.
இரவு தூங்கவைக்கும் அவள் நியாபகமே காலை எழுப்பிவிடுகிறதே..!
    இன்றுவரை அவளை காணாத பகல் - வேளையில்லாதவனின் பகல் போலவும்... இரவு - ஒரு நோயாளியின் இரவைப் போலவும் இருக்கிறது...

..ரணம்..

                    
                                                        ..காதல் தோல்வி..

இந்த நாட்டில் பலருக்கு காதலிக்கத் தெரிகிறது ஆனால் சிலருக்குத் தான் நிறைவேற்றிக் கொள்ளத் தெரிகிறது.
இங்கே எத்தனையோ காதல்கள் விதைக்கப்பட்ட மறுநாளே புதைக்கப்படிகிறது. பல காதல் பூக்கள் கல்லரையில் விழவே பூக்கின்றன. சில காதல் கனிகள் கனிகின்ற அவசரத்தில் விம்பிவிடுகின்றன. அதற்கு
காதலர்கள் மட்டும் காரணமல்ல.. மண், வெப்பம், காற்று, ஈரம் இந்த நான்கு காரணங்களில் ஒரு காரணம்
குறைந்தாலும் விதை முளைக்காது என்பது மாதிரி.. ஜாதி, மதம், மரபு, பொருளாதரம் இந்த நான்கில் ஒன்று குறைந்தாலும் கூட காதல் கற்பத்திலேயே கறைந்து விடுகிறது. இந்த கடிதம் எழுதுபவன் காதலை ஏற்றுக்கொண்டவன் இறுதியில் காதலியை ஏற்றுக்கொள்ள முடியாதவன்.
     பருவம் காதல் எனும் சிறகு குடுத்தது ஆனால் எதார்த்தம் என் சிறகுகளை கத்திருக்கிறது..
கால்களில் லாடங்களோடு உன்னோடு ஓடிவர முடியாது காதலி என்று கண்ணீர் வாசகம் பேசுகிறான்.
இப்படித்தான் இந்தியாவில் பல காதலர்களுக்கு...
        " உன்னை காதலிக்கிறேன் என்பது தமிழ்த்தாய்வாழ்த்தாகவும்..
          என்னை மறந்துவிடு என்பது தேசியகீதமாகவும் ஒளிக்கிறது.."
இதோ அவனது மனதின் குறியீடு (ஏன் நம்மில் பலரது மனக் குறியீடும் இதுதான்) :
சொன்னவன் நான் தான் - உனக்கும் சேர்த்து சுவாசிக்கிறேன் என்று சொன்னவன் நான் தான்..
சொன்னவன் நான் தான் - உன்னைத் தவிர என் கண்களுக்கு வேறு எதையும் பார்க்கத் தெரியவில்லை என்று சொன்னவன் நான் தான்..
 நம் திருமணத்தில்
கடல் முத்துக்களையும்..
வானம் நட்சத்திரத்தையும் அர்ச்சனை தூவும்
என்று சொன்னவன் நான் தான்..
    ஒருவேளை நாம் பிரிந்தால்...!
மழை மேல் நோக்கிப் பெய்யும்..
காற்றும் இடைமறிக்கும்.. என்று சொன்னவன் நான் தான்..
இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால் இதை சொல்வதும் நான் தான்..
                                       " என்னை மன்னித்து விடு
                                          என்னை மன்னித்து விடு"
நான் காதல் கொண்டது நிஜம்.. கனவு வளர்த்தது நிஜம்.. எனது இரத்தத்தில் இரண்டு அனுக்கள் சந்தித்து கொண்டு உனது பெயரை உச்சரித்தது நிஜம்.. காதலியைத் தெரிந்த எனக்கு காதலிக்கத் தெரியவில்லை..

(இந்தியா காதல் பூமிதான்.. காதலர் பூமியல்ல) காதலுக்கு சிறகு மட்டுமெ தெரியும் ஆனால் திருமணத்திற்குத் தான் கால்களும் தெரியும்.. எனக்கு சிறகு தந்த காதலியே என் கால்களின் லாடத்தை யார் அறிவார்? சொல்கிறேன்..
" என் தாயைவிட சாய்ந்த நாற்காலியை அதிகம் நேசிக்கும் என் தந்தை "
" சீதணம் கொண்டுவந்த பழைய பாய் போல் கிழிந்த என் தாய் "
" தான் பூப்பெய்த செய்திகூட புரியாத என் தங்கை "
" கிளிந்த பாயில் படுத்துக் கொண்டு கிளியோபாட்ராவை நினைத்து ஏங்கும் என் அண்ணன் "
" கறுப்பு-வெள்ளை தொலைகாட்சியில் கலர் கனவு காணும் என் தம்பி "
இத்தனை பேருக்கும் மாதா மாதம் பிராணவாயு வழங்கும் நான் கால்களில் லாடங்களோடு எப்படி உன்னுடன்
ஓடி வருவேன்.. என்னை மன்னித்து விடு.. என்னை மன்னித்து விடு.. 
ஐரோப்பாவில் கல்யாணத் தோல்விகள் அதிகம்.. இந்தியாவில் காதல் தோல்விகள் அதிகம்.. இந்தியா காதலின் பூமிதான்.. காதலர் பூமியல்ல...

My

pitichiruku